பழங்கள் நன்மைகள்

செவ்வாழை.

செவ்வாழை பழத்தில் சுண்ணாம்புச் சத்து , உயிர் சத்து மற்றும் இரும்பு சத்துக்கள் என பல பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குழந்தைகள் இல்லாத தம்பதி தினமும் செவ்வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு விட்டு, அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும் இதுபோன்ற தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இரவு உணவிற்குப் பிறகு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். மேலும், உடலில் இருக்கும் சொறி சிரங்கு வெடிப்பு போன்ற வியாதிகளுக்கும் செவ்வாழை மிகச் சிறந்த நிவாரணியாகும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும்.


இதனால், ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் நீங்கி உடல் பலம் பெறும். நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் சக்தி, செவ்வாழைப்பழத்தில் இருக்கின்றது. 


வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் மூல நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சிறுநீரக கோளாறும் இது நீக்குகிறது 


கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பித்தால் அவர்கள் தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் 21 நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

( thank for whats app message ) 

______________________________________


விளாம்பழம்.

யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறண்ட கூந்தல்,முகத்தில் ஏற்படும் வறட்சி உள்ளவர்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்".

பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும்.

 ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு.

இதை அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும் இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.....

பல் எலும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு வெளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம்.

 மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிஉதிரபோக்கு வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.

 ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் பாம்புகடியின் வீரியத்தை குறைக்க வல்லது இது அகத்தியர் குணபாடத்தில் கனிகளிலேயே முதன்மையானது விளாம்பழம் என்பதையும் நோக்குவோம்.

பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற குறிப்பையும் கவனிப்போம்.

யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம் இதை சாப்பிடும் போது உள்ளே உள்ள சதைகளை மட்டுமே கிரகித்து கொண்டு ஓடு மட்டுமே சாணத்தில் இருக்கும்.

 அதை உடைத்து பார்த்தால் ஏதோ சாம்பல் மாதிரி இருக்கும் இதை பார்த்தவர்கள் யாராவது உண்டு என்றால் யானை சாணியில் இருக்கும் விளாம்பழத்தின் ஓட்டின் புகைப்படத்தை இணைக்கவும்.

பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம் வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ கிரீம்களோ கிடையாது அனுபவத்தில் பலபேர் உணர்ந்தது.

தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும் ...

மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணமல் போகும்

Thanks for whats app message 

_______________________________________________________________________